districts

பருத்தி சாகுபடியில் பூச்சி தாக்குதல் விவசாயிகள் வேதனை: நிவாரணம் கிடைக்குமா?

திருவாரூர், ஜூன் 18 -  அரசின் அறிவுறுத்தல்படி திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய முன்வந்த விவசாயிகள், நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்தி ருந்தனர்.  காவிரியின் கடைமடைப் பகுதியான திரு வாரூர் மாவட்டத்தில் விவசாயமே வாழ்வாதா ரமாக உள்ளது. வறட்சி, மழை, வெள்ளம் என  சுற்றுச்சூழல் எதுவாக இருந்தாலும் அதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயி களின் வாழ்க்கைச் ஊழல் பாதிப்புக்குள்ளா வது தொடர்கதையாக இருக்கிறது.  இந்நிலையில் கோடை வெப்பம் காரண மாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், பேரளம் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர்  பரப்பளவில் பருத்தி பயிர்களில் சப்பாத்தி  பூச்சி எனப்படும் மாவுப்பூச்சி தாக்கியுள்ளது. இதனால் முதல் ஈடு மகசூல் எடுப்பதற்கு முன்பாகவே பூச்சி தாக்குதலால் செடிகள் ஒருவித மஞ்சள் நிறத்துக்கு மாறி, தழைகள்  வாடி, காய்கள் உதிர்ந்து சருகாக காட்சியளிக் கின்றன. துவக்கத்தில் நாடெங்கும் பஞ்சு தட்டுப் பாடு, நூற்பாலைகள் மூலப்பொருள் இல்லா மல் இயங்காமல் இருந்தது என பருத்தி யின் தேவை அதிகரித்து, விலையும் ரூ.120  நெருங்கும் விதத்தில் இருந்தது. இதனால்  இந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைக்குமென பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி யோடு பணிகளை செய்து வந்தனர். ஆனால்  மகசூல் வரும் நேரத்தில் பூச்சி தாக்கியதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  தற்போது பருத்தி விலை ரூ.80 என்ற  அளவில் குறைந்துள்ளது. பூச்சி தாக்குத லால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு  தரப்பிலிருந்து நிவாரணம் ஏதாவது கிடைக் குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் நிலவுகிறது.