districts

காப்பீட்டுக் கழகம் சார்பில்  நீர்மோர் பந்தல் திறப்பு

திருவாரூர், மே 4-   காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் எல்ஐசி கிளை சங்க வாயிலில் மேதின கொடியேற்ற நிகழ்ச்சி  தஞ்சை கோட்ட இணைச்செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நடை பெற்றது.  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல், லிகாய்  கிழக்கு கோட்ட செயலாளர் கருணாநிதி மற்றும் பூங்குன்றன்  ஆகியோர் வாழ்த்தினர். லிகாய் செயலாளர் விஜயராஜ் காப்பீட்டு ஊழியர் சங்க கொடியையும், ஊழியர் சங்க செயலா ளர் கமலவடிவேல் லிகாய் சங்க கொடியையும் ஏற்றினர். மே  தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மே மாதம் முழுவதும் மக்க ளின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் மற்றும் நீர்மோர்  பந்தலை கிளைத்தலைவர் சித்தார்த்தன் மற்றும் இராஜேந்திரன் தொடங்கி வைத்தனர்.