districts

நாளை குரூப் 4 தேர்வு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

திருவாரூர், ஜூலை 22-  தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-4 தேர்வு 24. 7.2022 காலை 9:30 மணி முதல்  மதியம் 12.30 மணி வரை  நடைபெறவுள்ளது. திருவா ரூர் மாவட்டத்தில் திருவா ரூர், கூத்தாநல்லூர், குட வாசல், மன்னார்குடி, நன்னி லம், நீடாமங்கலம், திருத் துறைப்பூண்டி, வலங்கை மான் ஆகிய 8 வட்டங்களுக் குட்பட்ட 93 தேர்வு மையங்க ளில், 122 தேர்வறைகளில் நடைபெற்ற உள்ளன. இத்தேர்வை திருவாரூர் மாவட்டத்தில் 35,646 தேர்வர்கள் எழுதவுள்ளனர். இத்தேர்வு செம்மையாக நடைபெற ஏதுவாக துணை ஆட்சியர் நிலையிலான 11  பறக்கும் படை குழு, 7 தேர்வு  மையங்களிலும் கண்கா ணித்திட கண்காணிப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  தேர்வு நாளன்று வினா  மற்றும் விடைத்தாள்களை மாவட்ட கரு வூலங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேர்வு முடி வுற்ற பின்பு வினா, விடைத் தாள்களை தேர்வு மையங் களிலிருந்து எடுத்துச் சென்று  மாவட்ட கருவூலங்களில் ஒப்படைத்திட 29 இயக்கக் குழு அலுவலர்களும், 122  தேர்வுக் கூடங்கள் மற்றும்  மாவட்ட கருவூலம், 6 சார் நிலைக் கருவூலங்களில் தேர்வு தொடர்பான நிகழ்வு களை பதிவு செய்திடும் பொருட்டு 129 வீடியோ கிராபர்களும் ஈடுபட உள்ள னர். மேலும் ஒரு தேர்வுக் கூடத்திற்கு ஒரு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் தேர்வு நடைபெறவுள்ள 122 தேர்வுக் கூடங்களுக்கும் 122  ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு தேர்வு பணியில் ஈடுபட  உள்ளனர் என மாவட்ட ஆட்சி யர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரூர் கரூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை, கரூர்  மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 110 மையங்க ளில் மொத்தம் 30,646 தேர்வர் கள் எழுத உள்ளனர். தேர்வர் கள் அமர்ந்து தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடி நீர் மற்றும் கழிப்பிட வசதி கள், வெளிச்சம் மற்றும் மின் வசதி, போதிய காற்றோட்ட  வசதி, தேர்வுக் கூடங்களுக் குச் செல்ல போதிய பேருந்து  வசதி போன்ற அனைத்து  வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பா ளர் மற்றும் கண்காணிப்பா ளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். தேர்வு நாளில் தேர்வு கண்காணிப்பு பணிக் காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் 6, பறக்கும்படை குழுக்கள் 15 மற்றும் வினாத்தாள், விடைத்தாள்களை வழங்க  ஏதுவாக 26 நடமாடும்  குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நட வடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ  பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக் குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  தேர்வர்கள் கைப்பேசி, கணிப்பான்கள் மற்றும் மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாத னங்களையும் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர் தெரிவித்து உள்ளார்.