districts

டாஸ்மாக் ஊழியரை தாக்கி  பணம் பறித்த கும்பல் கைது

திருவாரூர், மார்ச் 9-  குடவாசல் பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை பறித்து சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வீதி விடங்கன் டாஸ்மார்க் கடையின் மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி. இவர் டாஸ்மார்க் கடையின் இரண்டு  நாள் விற்பனை தொகையான ரூ.8.54 லட்சத்தை வங்கி யில் செலுத்த சென்றுள்ளார்.  அப்போது ஸ்ரீவாஞ்சியம் நேரு நகர், மாணிக்க நாச்சி யார் கோவில் மதகடி அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் தெட்சிணாமூர்த்தியை அரிவாளால் தாக்கி அவரி டமிருந்த பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டு, ஸ்ரீவாஞ்சியம் பகுதியைச் சேர்ந்த சேவாக், ரமேஷ்,  அரவிந்தன், அருள்ஜீவா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த இளையராஜா, விழுப்புரத்தைச் சேர்ந்த முரளிதரன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.