districts

img

அரசுப் பள்ளியில் காந்தி சிலை சேதம்

குடவாசல், அக்.26 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வடகண்டம் ஊராட்சி துவக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது. மர்ம நபர்கள் சிலர், சிலையில் காந்தியின் கைகளை உடைத்து  சேதப்படுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை அடுத்து, புதனன்று காலை பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த, தூய்மை காவலர்கள் சென்றுள்ளனர். அப்போது காந்தி சிலை சேதமடைந்ததை கண்டு, உடனே பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், குடவாசல் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா நேரில் வந்து ஆய்வு செய்தார்.

;