திருவாரூர், ஏப்.26 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகரம், மன்னார்குடி சாலை, 1 ஆவது வார்டில் வசித்து வரும் விவசாயியான செல்வ ராஜ் - மோகனா தம்பதிய ரின் கடைசி மகனான எஸ். கபில் (28) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடக்க இயலாமல் படுத்த படுக்கை யாக சிரமப்பட்டு வரு கிறார். இவரது நிலை குறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி விரிவான செய்தி வெளியாகி யிருந்தது. இவர் தனக்கு உதவிடக்கோரி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். இவரது நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை (ஏப்.26) சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், நகர செயலாளர் கே.கோபு, நகரக் குழு உறுப்பினர் எம்.பி.கே. பாண்டியன், மாற்றுத்திறனா ளிகள் சங்க மாவட்ட தலை வர் டி.சந்திரா ஆகியோர் நேரில் சென்று விசாரித்து குடும்பத்தினருக்கு தைரி யம் கூறினர். இதன்பிறகு இவர்களின் முக்கிய கோரிக்கைகளான அரசின் சார்பில் சிறப்பு சிகிச்சை, மாத ஓய்வூதியம், வங்கி மூலம் சிறு தொழில் கடன், குடும்பத்தில் ஒரு வருக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை, இல்லம் தேடி மருத்துவம் போன்றவற்றை வழங்க வலி யுறுத்தி மே 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் இளைஞர் எஸ்.கபில் இல்லம் முன்பாக மன்னார்குடி சாலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் சார்பில் மறியல் போராட் டம் நடத்திட தீர்மானிக்கப் பட்டது.