திருவாரூர், ஜூலை 20 - திருவாரூர் மாவட்டம் வேலுடையார் பள்ளி மையத் தில் நடந்த நீட் தேர்வில் தந்தையும் மகனும் தேர்வு எழுத வந்தது மற்ற தேர்வர்களை வியப்படைய வைத்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காத்தையன்(50). இவருக்கு குமரன்(19) என்ற ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 1992 ஆம் ஆண்டு கோட்டூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்த இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் குமரன் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்துக் கொண்டே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். மகனோடு சேர்ந்து தந்தையும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததோடு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் இருவரும் ஒரே மையத்தில் தேர்வு எழுத வந்திருந்தனர். இதைக்கேட்டு தேர்வு மையத்துக்கு வந்தி ருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுகுறித்து காத்தை யனிடம் விசாரித்த போது, ‘நான் மருத்துவராக வேண்டு மென்பது நீண்ட நாள் ஆசை. தற்போது நீட் தேர்வுக்கு வயது வரம்பு இல்லை என அறிவித்திருப்பதால் நானும் விண்ணப்பித்தேன்’ என்றார்.