திருவாருர், ஏப்.24 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் காமரா ஜர் சாலை பி.எம்.எச் காலனியில் ராஜேந்திரன் என்பவர் தனது மகன்கள் மதன், தர்ராஜாவுடன் வசித்து வந்தார். இவர்க ளது குடும்பத்தினருக்கும், அதே காலனியில் வசித்து வந்த ருக்குன் பாட்ஷா என்பவரது குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ருக்குன் பாட்ஷா தரப்பினர் மேற்படி மதன் மற்றும் தர் ராஜாவை வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாவூரைச் சேர்ந்த ஹாஜி முகமது, கொரடாச்சேரியை சேர்ந்த ருக்குன் பாட்சா மற்றும் அவரது மகன்கள் மன்சூர் அலிகான், மர்ஜித் அலிகான் ஆகி யோர் மீது கொரடாச்சேரி காவல்நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஹாஜி முகம்மது, ருக்குன் பாட்ஷா, மர்ஜித் அலிகான் ஆகியோ ருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6,000 அபராதமும் மன்சூர் அலிகானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.