குடவாசல், ஜூலை 6- குடவாசல் அருகே மூலங்குடியில் விளையாட்டு மைதானத்தில் குடவாசல் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் சார்பாக 11 ஆவது ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இதில் 16 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை தஞ்சை டெய்லி ரைடர்ஸ் கிரிக்கெட் அணி வென்றது. முதல் பரிசு மற்றும் சுழல் வெற்றிக்கோப்பையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வழங்கி வீரர்களை பாராட்டினார். இரண்டாவது பரிசை குடவாசல் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் பெற்றது.பரிசினை வழக்கறிஞர் சபரிசன் வழங்கினார். மூன்றாவது பரிசை ஏனங்குடி கிரிக்கெட் ரைடர்ஸ் அணி வென்றது.ஜாவித்அலி பாதுஷா பரி சினை வழங்கினார். நான்காவது பரிசை திருவாரூர் ஓஜா அணி வென்றது.குடவாசல் கிரிக்கெட் கிளப் பொறுப்பா ளர் புகழேந்தி பரிசினை வழங்கினார். ஐந்தாவது பரிசை குழிக்கரை ஏ.ஜே, பாய்ஸ் அணி வென்றது. பரிசை தீக்கதிர் செய்தியாளர் நீதிராஜன் வழங்கினார். கிரிக்கெட் கிளப்ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஸ்வரன்,கணேஷ் நன்றி கூறினர்.