districts

img

அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 29- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம், வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர் ஊராட்சியில் அடிப்படை வச திகளை செய்து தரக்கோரி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் சி.மாசி லாமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்  பினர்கள் கே.என்.முருகா னந்தம், கே.தமிழ்மணி, ஒன்  றியச் செயலாளர் வி.டி.கதி ரேசன், ஒன்றியக் குழு  உறுப்பினர் கே.சிவலிங்கம், கட்சி உறுப்பினர்கள் நாகூ ரான், கிருஷ்ணமூர்த்தி, மாது, ராஜேந்திரன், உலகநாதன், சிவசாமி, சரவணன், பாஸ்  கர், தங்கமணி, பக்கிரியம் மாள், சாந்தா, பூங்கொடி, ஜெயபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், வெட்டு குளத்தில் மழை நீரு டன் கழிவுநீர் கலந்து மாசுபடு வதை தடுத்து வடிகால் செய்து தர கோரியும், கஜா புயலில் மின்கம்பங்கள் சாய்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மின்  கம்பங்களை சரி செய்திட  கோரியும், அடப்பாற்றங் கரையில் உயர் மின்னழுத்த மின் கம்பியுடன் தெரு விளக்கு மின்கம்பியும் இணைந்து அடிக்கடி மின் தடை ஏற்படுவதை சரி செய் திட வேண்டும் என்பன உள்  ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.

;