districts

img

சிபிஎம் மூத்த தோழர் ஏ.காளிமுத்து காலமானார்

திருத்துறைப்பூண்டி, நவ.30- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கண் டைலர் என அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தோழர் ஏ.காளிமுத்து உடல் நலக்குறை வால் காலமானார்.  தோழர் ஏ.காளிமுத்து 1967-ஆம் ஆண்டு  கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு  பணியாற்றினார். ஆலங்காடு நடராஜன்,  கள்ளிக்குடி மாணிக்கம், எம்பி.வீரையன் ஆகியோருடன் கட்சி பணியாற்றியவர். தோழர் ஏ.காளிமுத்து நெருக்கடியான கால கட்டத்தில் முத்துப்பேட்டை பகுதியில் கட்சி யை வளர்ப்பதில் பெரும் பங்காற்றினார். மேலும் கட்சியில் வட்டாரக் குழு உறுப்பி னர், முத்துப்பேட்டை நகர செயலாளர் உள்  ளிட்ட பொறுப்புகளை ஏற்று திறம்பட செய லாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது மறைவு செய்தி அறிந்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, தமிழ்  மணி, ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் செல்லத்துரை, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.இராஜேந்திரன் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

;