districts

img

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுக்கு இரங்கல்

திருவாரூர், மே 8 - மே 1 ஆம் தேதி மாரடைப்பால் காலமான  சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலா ளர் மற்றும் வெளியீட்டாளருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்ச்சி திரு வாரூரில் நடைபெற்றது.  கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்விற்கு பி.தெட்சிணாமூர்த்தி தலைமையேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். குமாரராஜா, எம்.சேகர், பி.கோமதி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.ஹரி சுர்ஜித், பத்திரிகையாளர் எஸ்.நவமணி, மாவட்ட செய்தியாளர் வ.வசந்தராஜன் உள்ளிட்டோர் புகழுரையாற்றினர். வட்டார செய்தியாளர் ஏ.கே.வேலவன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இடைக்கமிட்டி செயலா ளர்கள், தீக்கதிர் முகவர்கள் கலந்து கொண்ட னர்.

;