districts

img

திருவாரூரில் இன்று தொடங்குகிறது புத்தகக்கண்காட்சி

திருவாரூர், மார்ச் 24- திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 25-ஆம் தேதி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை புத்தகக் திருவிழா நடைபெறஉள்ளது. புத்தகத்திரு விழா  குறித்து கல்லூரி மாணவ- மாணவி யர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு திரு.வி.க. அரசு கலை அறிவியல் கல்லூரி யில் நடைபெற்றது நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கோ.கீதா தலைமை வகித்தார். கல்லூரி மாணவ மாணவியர்களிடம் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு  உரையாற்றிய ஆட்சியர் சாருஶ்ரீ புத்தகக் திருவிழா குறித்த விழிப்புணர்வு பிரசுரங்க ளையும் வழங்கினார். தமுஎச மாவட்டத் தலைவர் மு.சௌந்த ரராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.வெங்க டேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம் பரம், எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன், பாரதி புத்தகாலயம் மாவட்டப் பொ றுப்பாளர் கே.ஜி.ரகுராமன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆனந்த்,   பகவான்ராஜ், டி.மகாலிங்கம், அசோக் ராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.