districts

ஏப்.24 சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

திருவாரூர், ஏப்.20 - ஒவ்வொரு ஆண்டும் 24.4.2022 ஆம் நாள் தேசிய பஞ்சா யத்து ராஜ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத் தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.4.2022 அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சமுதாயத்தில் உள்ள  பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனா ளிகள், சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுதொழில்  செய்பவர்கள் ஆகிய பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கைத்  தரத்தினை உயர்த்தவும், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை  அடையவும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24.4.2022 அன்று நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை  கூட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள  அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்துகொண்டு  தங்கள் கிராம ஊராட்சிக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் தங்கள் பங்களிப்பையும் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.