districts

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

  திருவாரூர், ஏப்.12- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டுக்கான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் வண் டாம்பாளையில் உள்ள தமிழ் நாடு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏப்.29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  இதில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சி யாளர்களை தேர்வு செய்ய  உள்ளனர். எனவே, இம்முகா மில் தொழிற்பயிற்சி நிலை யத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெற லாம். மேலும் விவரங்க ளுக்கு நேரிலும், 04365- 250126 என்ற தொலைபேசி  எண்ணிலும் நாகப்பட்டினம், மாவட்ட திறன் பயிற்சி அலு வலக (அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), உதவி  இயக்குநரை தொடர்பு கொள் ளலாம் எனஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.