districts

img

எளிய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சிறுவனின் முகம் சிதைவு

திருவாரூர், நவ.21- திருவாரூர் மாவட்டத்  தில் உள்ள 430 ஊராட்சி களை உள்ளடக்கிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் ஏராள மான ஏழை, எளிய மக்கள்  தொடர்ந்து 25, 30 ஆண்டு களாக வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வரும் வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்  காலங்களில் எந்த நேரத்தி லும் எதுவும் நடக்கலாம்  என்ற அச்ச உணர்வோடு தான் இவர்களின் வாழ்க்கை தொடர்கிறது.
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு
அபாயகரமான நெருக்  கடியிலும் வேறு மாற்று இடம் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இம்மக்களை திரட்டி மனு கொடுத்தனர். இதனால் எப்படியாவது நமது இந்த  பரிதாப நிலைக்கு ஆட்சியா ளர்களின் நடவடிக்கை மூல மாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படை யில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது தான் வேதனையான உண்மை.
அனைத்து ஊராட்சிகளிலும் பரிதாப சூழ்நிலை
மாவட்டத்தில் 50 ஆயிரத்  துக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் சுமார் 30 ஆண்டு களுக்கு முன்னதாக கட்டி கொடுக்கப்பட்டது. இதில் பல்வேறு காலங்களில் தொடர்ச்சியாக மாவட்டம் சந்தித்து வந்த பெரும் மழை, புயல், வெள்ளம் என்ற பல்  வேறு இயற்கை சீற்றத்திற்கு உள்ளான சூழலில் இவ்வீடு கள் பெரும் சேதத்திற்கு உள்  ளாகி இருக்கிறது. குறிப்பாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரைகளின் மேல் தளம் எந்த நேரத்தில் இடிந்து விழக்கூடிய நிலை யில் உள்ளது.  இதுதொடர்பாக பல் வேறு போராட்டங்களை நடத்தி மக்களை பாது காத்திட மார்க்சிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டக் குழு எடுத்த முயற்சிகள் எண்ணில் அடங்காததாகும்.
சிறுவனின் முகம் சிதைவு
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி இரவு திருவாரூர் ஒன்றி யம் அலிவலம் ஊராட்சி யில் உள்ள கோயில்பத்து கிராமத்தில் தொகுப்பு வீட்  டில் வசித்து வரும் வீரக் குமார்-பரிமளா தம்பதியின் மகன் ஆனந்த் (12). இவர், தனது சகோதரி மற்றும்  பாட்டியோடு உறங்கிக் கொண்டிருந்த போது, தொகுப்பு வீட்டின் மேற்  கூரை இடிந்து மாணவன் ஆனந்த் முகத்தில் விழுந் தது. இதனால், அவரது முகம் பெரிய அளவில் சிதைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கிறார்.  இக்கிராமத்தில் உள்ள 22 தொகுப்பு வீடுகளும் இப்  படியான பெரும் பாதிக்கப் பட்ட நிலையில் தான் உள் ளது என்பதை இச்சம்பவத் தின்மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
சிபிஎம் போராட்டம்
எனவே மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிய தரமான கான்கி ரீட் வீடுகளை கட்டித் தர  வேண்டும், இப்பிரச்ச னைக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்  கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை என்றால் பாதிக்  கப்பட்ட மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் குடியேறும் போராட் டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.