குடவாசல், நவ.7- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், வடகண்டம் ஊராட்சி, எட்டிய லூர் பாலவை பகுதியில் சிபிஎம் சார்பில் நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 25 குடும்ப உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பி னர் கே.செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் நவம்பர் புரட்சி தின கொடியேற்றி, புதி தாக கட்சியில் இணைந்தவர்களுக்கு கைத் தறி துண்டு அணிவித்து வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.