திருவாரூர், டிச.25 - 55 ஆவது வெண்மணி நினைவு நாளான திங்க ளன்று (டிச.25) 300க்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணியில் சங்கமித்து அஞ்சலி செலுத்தினர்.
19 வது ஆண்டாக...
19 வது ஆண்டாக இன்சூரன்ஸ் ஊழியர்கள் இம்முறை திருவாரூர் கருத்தரங்கம்- சங்கமம் நிகழ்ச்சியை நடத்தினர். வர்க்க - சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒரு சேர முன்னெடுப்பது பற்றி கவிஞர் முத்துநிலவன் சிறப்புரை ஆற்றினார். வெண்மணி வரலாறு குறித் தும் இன்றைய சவால்கள், தொழிற்சங்க இயக்கங்க ளின் கடமை பற்றியும் விரிவாகப் பேசினார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், நெல்லைக் கோட்டத் தலைவர் செ.முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலா ளர் க.சுவாமிநாதன் கருத்துரை ஆற்றினார்.
பாராட்டு
நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மையத்தை தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெற்றி கரமாக நடத்தி வரும் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கோவைக் கோட்டத்திற்கு பாராட்டு தெரிவித்து, அதன் பொதுச் செயலாளர் துளசிதரன் கவுரவிக்கப்பட்டார்.
அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜி.ஆனந்த், மூத்த தலை வர்கள் கோபால் (பொது இன்சூரன்ஸ்), யேசுதாஸ் (தஞ்சைக் கோட்டம்) மதுபால் (திருநெல்வேலி கோட்டம்) மற்றும் கோட்ட சங்கத் தலைவர்கள் எஸ்.ராமன் (வேலூர்), என்.பி. ரமேஷ் கண்ணன், என்.சுரேஷ்குமார் (மதுரை), செல்வராஜ் (தஞ்சாவூர்) ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை, நெல்லை, மதுரை, கோவை, வேலூர், தஞ்சை ஆகிய கோட்டங் கள், மண்டலங்களில் இருந்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் வந்திருந்தனர். தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் வ. சேதுராமன் வரவேற்க, நெல்லைக் கோட்ட பொதுச் செயலா ளர் பொன்னையா நன்றி கூறினார். பின்னர் இன் சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணியில் அஞ்சலி செலுத்தினர்.