districts

img

ரூ.1.35 கோடி மோசடி செய்த மூவர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்திடுக! திருவாரூர் எஸ்.பி.யிடம் மனு

திருவாரூர், மார்ச் 1 - மோசடி புகார் தொடர்பாக சென்னை  உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப் பட்ட தொழிலதிபர் உட்பட மூவர் மீது,  நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்து   குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப் பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டம், எடையூர் கிராமத்தைச்  சேர்ந்த பி.வைகுண்டம் மற்றும் அவரது  மகன் வை.பரணி ஆகியோர் நடத்தி  வந்த எஸ்.பி.ஆர்.ஏஜென்சிஸ் பெட் ரோல் பங்கை, திருத்துறைப்பூண்டி நெடும்புலத்தில் வசித்து வரும் ஆர்.முரு கானந்தம் என்பவர் 1.7.2018 அன்று திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், வட்டித்தொழில் செய்து வருபவருமான எஸ்.என்.ஆர் என்கிற எஸ்.நடராஜன் மூலமாக ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் கிரயம் பேசி இரண்டு தவணையாக, முறைப்படி வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், ரொக்கம் மூலமாகவும் பணத்தை வழங்கி னர். ஆர்.முருகானந்தம் இதன் அடிப்ப டையில் கூடுதல் முதலீடு செய்து பெட் ரோல் பங்கை நடத்தி வந்தார். இந்நிலை யில் சற்றும் எதிர்பாராத வகையில் வை குண்டம் மற்றும் அவரது மகன் வை. பரணி ஆகியோர், எஸ்.நடராஜனின் தூண்டுதலின் பேரில் ரவுடிகளின் துணை யோடு அத்துமீறி பெட்ரோல் பங்கில் இருந்து முருகானந்தத்தை விரட்டி விட்ட னர்.  

இதன் காரணமாக பல்வேறு அரசியல்  கட்சி தலைவர்கள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்த அடிப்படையிலும், மாவட்ட குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகிய  வகையிலும், ஆதாரத்தின் அடிப்படை யில் மேற்கண்ட நபர்கள் மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறை, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிகை தயார் செய்தனர். இதனி டையே மேற்கண்ட நபர்கள் மூவரும் பொய்யான காரணங்களைக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று விட்டனர்.  இதனால் பாதிக்கப்பட்டவரான ஆர். முருகானந்தம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் (சி.ஆர்எல்எம்பி எண்- 7926 - 2021) 7.7.2021 அன்று 12 வாரத்திற் குள் மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்ய உத்தரவிட்டது. மேலும் இதே  வழக்கில் 25.2.2022 அன்று சென்னை  உயர்நீதிமன்ற நீதியரசர் டி.வி.தமிழ்ச் செல்வி, மேற்படி குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் எஸ்.என்.ஆர் என்கின்ற எஸ்.நடராஜனின் முன்ஜாமீனை ரத்து  செய்து உத்தரவிட்டார். மேற்படி நபர்கள்  நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைத்து பொய்யான காரணங்களைக் கூறி முன்ஜாமீன் பெற்றுள்ளனர். மேலும்  வழக்கை தொடுத்தவரான ஆர்.முருகா னந்தத்தின் புகாரில் உண்மைத்தன்மை கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதால் மோசடி செய்த மேற்கண்ட நபர்கள் மீது  விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டு மென திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஆர்.முருகானந்தம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமாரிடம் நேரில் சென்று மனு அளித்தார். அதன் பேரில் மாவட்ட காவல்கண்காணிப்பா ளர் மோசடி பேர்வழிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.