திருவாரூர், ஏப்.20 - திருவாரூர் வட்டம் அலிவலம் ஊராட்சியில் வசிக்கும் ஆர்.கனக வள்ளியின் கணவர் ரமேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி நன்னிலம் வட்டம் ஆண்டிபந்தல் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இந்த மர்மமான மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உரிய விசாரணை நடத்தாமல் நன்னிலம் காவல் துறை ஆய்வாளர் சுகுணா மற்றும் காவல்துறையினர் அவசர அவசர மாக இறந்து போன ரமேஷின் உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்ய வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காரணமான பாக்கம் கோட்டூரைச் சேர்ந்த என். முகமது முஸ்தபா, எம்.முகமது மாலிக் ஆகியோர் காவல் துறை யின் உதவியோடு வெளிநாடு தப்பி சென்று விட்டனர். இதனால் கணவனை இழந்த ஆர். கனக வள்ளி தனது குழந்தைகளோடு கடந்த 8 மாத காலமாக நீதி கேட்டு போராடி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை (ஏப்.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் பாதிக்கப்பட் டவர்களை அழைத்துச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயக்குமாரை நேரில் சந்தித்தார். அப்போது, சிறப்பு விசாரணை அதிகாரியை நிய மித்து மறு புலன் விசாரணை செய்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித் தார். புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக மறு விசாரணை செய்ய நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.இளங்கோவனை நியமித்து உத்தரவிட்டார்.மேலும் ரமேஷ் பயன்படுத்திய செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்த ‘சைபர் கிரைம்’ காவல் பிரி வினருக்கு உத்தரவிட்டார்.