districts

பழவேற்காட்டில் படகு சவாரி ஏரியில் மூழ்கி இருவர் பலி

திருவள்ளூர், பிப் 23- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதி அழகிய சுற்றுலா பகுதியாகும். இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அழகிய கடற்கரை,கலங்கரை விளக்கம், புனித மகிமை மாதா திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண வருவதுண்டு. இந்த நிலையில் சென்னை,அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் செல்வராஜ் வயது 45 என்பவரும்,அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் கதிரவன் வயது 20 ஆகியோர் பழவேற்காட்டிற்கு சென்று படகு மூலமாக ஏரியில் புதனன்று (பிப்.23)  படகு சவாரி செய்துள்ளனர். பழவேற்காடு அருகே உள்ள முகத்து வாரம் பகுதியில் படகு செல்லும் போது தவறி ஏரியில் விழுந்து மூழ்கினர். உடனடியாக திருப்பாலைவனம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏரியில் இருந்து இருவரும்  மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு  இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.