districts

வெள்ளாத்துக்கோட்டை ஆசிரமத்திற்கு சீல்வைக்க வேண்டும்: மாதர் சங்கம்

திருவள்ளூர், மார்ச் 11- மாணவி மரணத்திற்கு காரண மான வெள்ளாத்துக்கோட்டை ஆசிரமத்திற்கு சீல்வைத்து  போலிச் சாமியார் முனுசாமியை கைது செய்து, விசாரிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில்  காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீ ஸ்வரியிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பூசாரி முனுசாமியால்  ஹேமமாலினி என்ற பெண் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பலமர்மங்கள் உள்ளன. முதலுதவி செய்ய மறுத்த வெங்கல் தனியார் மருத்துவரின் மீதும் உயிரிழந்த ஹேமமாலினியின் செல்போனின் தரவுகளை மறைத்த சாமியார் உள்ளிட்ட குற்றவாளிகள் மீதும்  உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது,

 மாதர் சங்கம் வேண்டுகோள்
உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலை யில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை கொண்டு வீடியோ  பதிவுடன் மாணவியின் உடலை  பிரேதப் பரிசோதனை செய்து மரணத் திற்கான உண்மை காரணத்தை கண்டறியவேண்டும், ஆசிரமத்திற்கு நம்பிக்கையின் பெயரில் வரும் குழந்தையின்மை, திருமணமாகாத பெண்களை பூஜை என்கிற பெயரில் மயக்கி பல மாதங்கள் அங்கேயே தங்க வைத்து பணம் பறிப்பது, பாலியல் ரீதியாக அணுகுவது, வெளியில் தெரிவித்தால் மந்திரம் செய்து விடுவேன் என மிரட்டும் போலிச்சாமியார் முனுசாமி மீது உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் அதில் கூறப்பட் டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.ரமா, மாவட்ட செயலாளர் இ.மோகனா, பொருளாளர் ஏ.பத்மா, ஹேமமாலினி தாயார் நிர்மலா ஆகியோர் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரியிடம் அறிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.