திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயார் செய்யப்பட்ட மண்பாண்ட கைவினைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிமுகம் செய்து வைத்தார். செவ்வாயன்று (ஏப்.5) நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எப்.மல்லிகா, ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.