districts

திருவள்ளூர் , திருவண்ணாமலை முக்கிய செய்திகள்

மது பாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

பூந்தமல்லி, ஜன. 9- திருவள்ளூர் மாவட்டம் திருமலையில் உள்ள மதுபானக் கிடங்கில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வினியோகம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. லாரி ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த மார்த்தாண்டம் என்ற வாலிபர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டார்.  உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றும், முடியாததால் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைத்து லாரி அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மார்த்தாண்டத்தை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது 

திருவண்ணாமலை, ஜன. 9-   திருவண்ணாமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளன. இங்கு மான், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட பல வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

;