districts

img

திருத்தணி சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியை தொடங்கிடுக கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர், மார்ச் 21 - திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணைமின் உற்பத்தியை தொடங்கிடவும் எத்தனால் உற்பத்தி நிலையம் அமைத்திடவும்  நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கி  38 ஆண்டுகளில் ஒரு கோடி  டன் அளவிற்கு கரும்பை அரைத் துள்ளது. இதனால் ஆலையில் உள்ள இயந்திரங்கள் தேய்மானம் ஏற்பட்டு பழுதடைந்து உள்ளது. இந்த ஆலைக்கு  பின்னால் துவங்கப்பட்ட  ஆலைகள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை  அரசுகள் கவனிக்காமல் இருக்கிறது. நாளொன்றுக்கு  5000 டன்  அரவை திறன் கொண்ட ஆலையாக  மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக் கைய வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு திங்களன்று (மார்ச்-21)  கூடிய கரும்பு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்னை கோட்டையை நோக்கி நடைபயணமாக சென்றனர். 10  அடி தூரம் கூட செல்ல அனுமதிக்க வில்லை. அனைவரையும் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ரவீந்திரன் பேச்சு
முன்னதாக நடைபயணத்தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் டி.ரவிந்திரன் துவக்கி வைத்து பேசும் போது, திருவள்ளூர் மாவட்ட மும் கரும்பு சாகுபடியில் முதன்மை மாவட்டமாக உள்ளது இங்கு 2021-22 ம் ஆண்டு பருவத்தில் 12 ஆயிரம்  ஏக்கர்  பரப்பளவில் கரும்பு பயிரிடப் பட்டுள்ளது. ஆனால் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் 6 ஆயிரம் ஏக்கர் விளைச்சலை மட்டும் பதிவு செய்துள்ளது. மாவட்டத்தில் ஒரே சர்க்கரை ஆலை மட்டும் உள்ளது. இதனை மேம்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்து அரவைத் திறனை மேம்படுத்த முடியும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்றத்தில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கப் படும் என வாக்குறுதி அளித்தனர். நிதியும் ஒதுக்கவில்லை ஆலையையும் மேம்படுத்தவில்லை. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வரும் கரும்பின் பிழித்திறன் 6.2 ஆக குறைந் துவிட்டதால் ஆலையை செயல்படுத்த முடியாது என அதிமுக அரசு மூட திட்டமிட்டது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களில் பிறகு ஆலை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைவளாகத்தில் மாநில அரசு இணை மின் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி நிலையங்களை அமைத்திட வேண்டும், வருவாய் பங்கீட்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு தேவையான நிதியை நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவித்து ஆலையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்துல் அகமது, வி.அந்தோணி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீநாத், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.