districts

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளன மாநில மாநாடு

திருவள்ளூர், ஜன. 7- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் 10 வது மாநில மாநாடு பிப்ரவரி  16, 17 ஆகிய தேதிகளில் மீஞ்சூரில் நடைபெறவுள்ளது.

அதற்கான  வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் வெள்ளியன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கதிர்வேலு  தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு-வின்  மாநில இணைப் பொதுச்செயலாளர் வி.குமார், மாவட்டத் தலைவர் கே.விஜயன்,  மாவட்டச் செயலாளர் கே ராஜேந்திரன்,பொருளாளர் என்.நித்தியானந்தம், சம்மேளனத்தின் நிர்வாகிகள் பி.சீனிவாசன், என்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.சந்தானம்,  ஜி.விநாயகமூர்த்தி,  மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் ஜெயவேல், பாண்டியன், சலீல்,  ரவி,  கட்டுமான சங்கம் நிர்வாகி என்.ரமேஷ் குமார், தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.சித்ரா,  உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பழனி,  குமரவேலு, என்.தீபா மீஞ்சூர்  பேரூராட்சி பணிபுரியும் சங்க நிர்வாகி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு குழு நிர்வாகிகள் மாநில மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக கே.விஜயன்,  செய லாளராக ஏ.ஜி.சந்தானம்,  பொரு ளாளர் கே.எஸ்.குமரவேலு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.