திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்டம், புழல் ஒன்றியத்தில் அடங்கிய சென்றம்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலங்களில் சுமார் 1.20 ஏக்கர் நிலத்தினை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த இடத்தை அங்குள்ள கிராம மக்கள் பயன்படுத்துகின்ற வகையில் அல்லது அரசு கட்டிடங்கள் கட்டுவதற்காக தனி நபருக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து தருமாறு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியரிடம் சென்றம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமு தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.