திருவள்ளூர், ஜன.27- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் பாதுகாக்கப்படாது, மநுதர்ம அடிப்படையிலான அரசியல் சாசனமாக அது மாறிவிடும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்தார். தில்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த 3புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட் டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சட்டங்களை திரும்பப் பெற்றது. மேலும் சில வாக்குறுதிகளை அளித் தது. அதை செயல்படுத்தாத ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாடு முழு வதும் விவசாயிகள் குடியரசு தினமான வெள்ளியன்று (ஜன.26) டிராக்டர் பேரணி நடத்தினர். பொன்னேரியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங் கேற்று பெ.சண்முகம் பேசியதாவது: ஐக்கிய விவசாய சங்க நிர்வாகிகளி டம் அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தவறி விட்டது. புதிய மின்சார திருத்த சட்டம், தொழிலாளர் விரோத சட்டம் என பல்வேறு சட்டங் களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாததால் நாடு தழுவிய டிராக்டர் பேரணி நடை பெற்றுள்ளது.
அடுத்த மாதம் சாலை மறி யல், பந்த் உள்ளிட்ட போராட்டங்க ளுக்கு அழைப்பு விடுக்கப்படும். மதச்சார்பற்ற, சோசலிச ஜன நாயக குடியரசு என்பது தான் நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்ப டையாகும். மதச்சார்பற்ற நாடு என் பதை தகர்த்தெறிய கூடிய வகையில் மதச்சார்பான ஆட்சி என்பதை பகிரங்க மாக செயல்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அயோத்தி யில் கட்டி முடிக்கப்படாத கோவிலை அவசர அவசரமாக திறந்து நாட்டில் மிகப் பெரிய பதற்றத்தை உருவாக்கி னார்கள். நல்ல வேளையாக கல வரம் ஏற்படவில்லை. விரதம் இருப்ப தாகவும், புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதாகக் கூறிய பிரதமர் மோடி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மசூதியோ, தேவாலயமோ திறந் தால் ஒன்றிய அரசு இதே போன்று நடந்து கொள்ளுமா ? மதச்சார்பற்ற அர சாங்கமாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனம் கூறு கிறது. இந்தியாவில் நடைபெறுவது முடியாட்சி அல்ல, இது குடியாட்சி யாகும். ராமர் கோவிலை முழுவது மாக கட்டி முடிக்க 2ஆண்டுகள் முழுமை யாக தேவைப்படும் என கூறப்பட்டுள் ளது, ஆனால் மோடி அரசியல் ஆதா யத்திற்காக ராமர் கோவிலை அவ சர அவசரமாக திறந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவெற்றிபெற்று ஆட்சி தொடர்ந்தால் அரசியல் சாசனம் பாது காக்கப்படாது. அனைவரும் சமம் என்பதை தற்போதைய ஆட்சியா ளர்கள் ஏற்பவர்கள் அல்ல.
உயர்ந்த வன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத் தாழ்வை கடைப்பிடிப்பவர்கள். தப்பித்தவறி பாஜக ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அரசியல் சாசனம் இருக் காது. மநு தர்மத்தின்படி அரசியல் சாச னம் திருத்தப்படும். எனவே பாஜக ஆட்சியை அகற்றவேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவ சாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. அருள் தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.பாலன், புதிய ஜன நாயக தொழிலாளர் முன்னணியின் நிர்வாகி சுரேஷ்குமார், இடது தொழிற் சங்க மாநில துணைத்தலைவர் ஜானகி ராமன் ஆகியோர் பேசினர். முன்னதாக கிருஷ்ணாபுரத்திலி ருந்து துவக்கிய பேரணியில் 50 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்றன. பொன்னேரியில் சுமார் 5கிமீ தூரம் வந்த பேரணி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.