திருவள்ளூர், நவ. 17- திருத்தணியை அடுத்த வீரகநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகர் மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை செயலாளர் சுப்பிரமணி (எ) வேலு (வயது 35), விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். மழைநீர் வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொண்டாற்றினார். மக்கள் நல இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். மறைந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் வி.அந்தோணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.அப்சல்அகமத், வட்டக்குழு உறுப்பினர்கள் பாலாஜி, ரீசர், சின்னதுரை,மலை சங்க ஒன்றிய நிர்வாகிகள் பார்த்தீபன், சேகர், தமுஎகச மாவட்ட துணை தலைவர் தேசய்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் வேலுவின் உடல் புதனன்று (நவ16) பகத்சிங் நகரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.