திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜன.7) மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக நடைபெற்ற திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து 12 திருநங்கைகளுக்கு அனுமதி அட்டைகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, சந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி திருவத்சன், தலைமை குடிமை மருத்துவர் விஜயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.