திருவள்ளூர், மார்ச் 13- திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “கேலோ இந்தியா விளையாடு இந்தியா மாவட்ட மையம்” மாவட்ட விளை யாட்டரங்கில் கால்பந்து விளையாட்டிற்கு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கான தேர்வுப் போட்டிகள் நடைபெற வுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ”கேலோ இந்தியா விளை யாடு இந்தியா மாவட்ட மையம்” திருவள்ளூர், மாவட்ட விளையாட்டரங் கத்தில் கால்பந்து விளையாட்டு செயல் படுத்தப்படவுள்ளது. இம்மையத்தில் குறைந்தது 30 முதல் 100 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வரை சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி, வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்கான தேர்வுப் போட்டிகள் எதிர்வரும் 16.03.2023 அன்று காலை 9.மணிக்கு திருவள்ளுர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இருபாலாருக்கும் சிறந்த பயிற்சியாளர் மூலம் தினசரி காலை 6.மணி முதல் 8.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும். மேற்படி மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு போட்டி களுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விளையாட்டுச் சீருடைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். எனவே, மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் 16.03.2023 அன்று காலை 9.மணிக்கு திருவள்ளுர் மாவட்ட விளை யாட்டரங்கில் நடைபெறும் கால்பந்து தேர்வுப் போட்டிக்கு திருவள்ளுர் மாவட்ட பள்ளிகளில் பயிலும் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.