திருவள்ளூர், டிச. 7- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல் முதலம்பேடு ஊராட்சியில் கடந்த 2 மாதங்க ளாக வழங்கப்படாத நூறுநாள் வேலையை உடனே வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட மேல்முதலம் பேடு ஊராட்சியில் நூறுநாள் வேலையில் 450 கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் வேலை வழங்க வேண்டும். ஆனால் இந்த ஊராட்சியில் அடிக்கடி விடுமுறை விடப்படுவதாக கூறப்படுகிறது. ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இது குறித்து கண்டுகொள்ளாமல் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வேலை வழங்காததால் எழை, எளிய மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஏன், வேலை வழங்கவில்லை என்று பாதிக்கப் பட்ட மக்கள் கேட்டபோது ஊராட்சி நிர்வாகம் வாய்திறக்க மறுக்கிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக தலையிட்டு தொடர்ந்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்ட தலைவர் இ.ராஜேந்திரன், வட்ட செய லாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். சட்டக்கூலியை முழு மையாக வழங்க வேண்டும், ஏதேனும் முறைகேடு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், பதிவு செய்த அனைவருக்கும் வேலை செய்வதற்கான அட்டை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி னர்.