districts

img

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரிக்கை

திருவள்ளூர், மார்ச் 10- திருவள்ளூர் அருகில் உள்ள அய்ன் ஹைட்ராலிக் என்ற தனியார் நிறு வனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 20 தொழிலாளர்களுக்கு, மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி  சிஐடியு சார்பில் மார்ச் 10 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர்,  அரண்வாயல் அரு கில் உள்ள பாப்பரம்பாக்கத்தில் அய்ன் ஹைட்ராலிக் என்ற தனியார் நிறு வனத்தில் 75க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழி லாளர்கள் கடந்த 9 ஆண்டுகளாக பணி புரிகின்றனர். கொரோனா காலத்தில் வேலையில்லை என்பதால் வீட்டிலேயே இருங்கள் என நிர்வாகம் அறிவுத்தியது. கொரோனா காலம் முடிந்த பிறகு வேலைக்கு சென்றால் வேலை இல்லை என 20 நிரந்தர தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் அந்த குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் கொரோனா காலத்தில் வேலை இழந்த 20 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும், நிரந்தர தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணிய மர்த்துவதை நிறுத்த வேண்டும், அன்னிய நாட்டு கம்பெனிகள், இந்திய நாட்டின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் வியாழனன்று ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயகமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.நரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.