districts

img

 சோழவரத்தில் சமத்துவ பொங்கல் விழா

புதுச்சேரி, ஜன. 16- புதுச்சேரியில் மேல தாளத்துடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டா டப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை யொட்டி புதுச்சேரி பெத்து செட்டிபேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உழவர் கரையில் சமத்துவ பொங் கல் விழா கொண்டாடப்பட் டது. நிகழ்ச்சிக்கு நகரச் செய லாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். இதில்,அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்க லிட்டு விழாவை மகிழ்ந் தனர். நிகழ்ச்சியில் கட்சி யின் மாநிலச் செய லாளர் ராஜாங்கம், செயற் குழு உறுப்பினர் கொளஞ்சி யப்பர், மாதர் சங்க மாநிலத் தலைவர் முனியம்மாள், கமிட்டி உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், ராம கிருஷ்ணன், குணசேகரன், ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.