districts

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர், பிப் 18- திருவள்ளூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் திருவள்ளூர் அருகில் உள்ள மணவாளநகர் கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 25ஆம்தேதி  நடைபெறவுள்ளது.   இந்நிகழ்வில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய முன்னணி தனியார் தொழில் நிறு வனங்கள் கலந்துக்கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளனர்.  இம்முகாமிற்கு குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 8, 10, 12, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, பட்டயப்படிப்பு, ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்கள், டெய்லரிங் தொழில் கல்வி பயின்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிய வயது, கல்வித் தகுதி முதலான முக்கிய ஆவணங்களுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற நல்லதொரு வேலைவாய்ப்பினை பெற்றிடவும், இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் - 044 – 27664528 மற்றும் உதவி இயக்கு நர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,    திருவள்ளுர், தொலைபேசி எண். 044–27660250 ஆகிய முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என அவர்  தெரிவித்துள்ளார்.