திருவள்ளூர், பிப் 9- செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் குற்றம் சாட்டி னார். திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் செவ்வாப் பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒன்றிய, மாநில அரசுகள் தலா 50 விழுக்காடு நிதி யாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட மேம்பால கட்டும் பணி தொடங்கி நடை பெற்று வந்தது. இந்த பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு 12 ஆண்டு களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. தற்காலிகமாக செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் செல்வதற்காக அமைத்த சுரங்கப் பாதையையும் சிறு பொந்து போல உள்ளது. இதனால் செவ்வாப்பேட்டை திருவூர், அரண்வாயில் சேர்ந்த பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவி கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். நிலம் எடுப்ப தில் காலதாமதம் என சொல்லி பல ஆண்டு களாக திட்டத்தை நிறை வேற்றாமல் உள்ளனர்.
மேலும் 13 கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக ரயில் மறியல் போராட் டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி னர். இதனை தொடர்ந்து அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் என அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அறிவித்தனர். அறி விப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவ்வா பேட்டை ரயில்வே மேம் பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன் பேசுகை யில், கார்ப்பரேட் முதலாளி கள் அதானி, அம்பானி ஆகி யோர் நலனுக்காக விரைவு பாலங்களை அமைக்கும் ஒன்றிய, மாநில அரசுகள், சாதாரண மக்கள் பயன் படுத்தும் மேம்பாலத்தை அமைக்க மறுக்கிறது. மாவட் டத்தில் உள்ள அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மக்க ளின் வேதனையை புரிந்து கொள்ளாமல் கால தாமதம் செய்து வருகின்ற னர். இதனை அனுமதிக்க முடியாது. மக்கள் கொதித் தெழும் காலம் விரைவில் வரும் என எச்சரித்தார். கட்சியின் கிளை செய லாளர் ஏ.ஆண்ரியாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே. ராஜேந்திரன், இ.மோகனா, ஆர்.தமிழ் அரசு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், கிளைச் செயலாளர் எஸ்.விஜயா, ஆர்.உத்தண்டராமன், மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஏ.வி.சண்முகம், இ.கங்காதரன் ஆகியோரும் பேசினர்.