districts

img

மதத்தால் மக்களை பிளவு படுத்தாதே : சிறுபான்மை நலக்குழு கருத்தரங்கில் வலியுறுத்தல்

திருவள்ளூர், பிப் 21- மக்களை பிளவு படுத்தும்  மதவெறி அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்ற  தலைப்பில் கலந்துரை யாடல்  திங்களன்று (பிப்.20)  பொன்னேரியில் நடை பெற்றது. மதவெறி அரசியலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில்  நடைபெற்ற இந்த கருத்த ரங்கில் பகுதி தலைவர் முகமதுசலீல் தலைமை தாங்கினார். மாநில தலை வர் எஸ்.நூர்முகமது, சட்ட  மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, மாநில பொதுச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எஸ். எம்.அனீப், துணை நிர்வா கிகள் ஜோசப் சந்திரன், சீனிஹாத்திம்கனி,விமல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.