districts

தொடர் மழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 90 விழுக்காடு நிரம்பின

திருவள்ளூர், ஆக.1- சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அவ்வப் போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வரு கிறது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த ஏரிகளிலும் 90 விழுக்காடு  தண்ணீர் உள்ளது. பூண்டி யில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 மில்லி யன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதில் 600  மில்லியன் கன அடி தண்ணீர்  இருப்பு உள்ளது. சென்னை மக்கள் குடிநீருக்காக 315  கன அடி நீர் வெளியேற்றப் படுகின்றது. இது 18.57 விழுக் காடாகும் . புழல் ஏரியில் மொத்தக் கொள்ளளவான 3300 மில்லியன் கன அடி யில் தற்போது 3002 மில்லி யன் கன அடி நீர் இருப்பு  உள்ளது. 256 கன அடி நீர்  வருகிறது. 205 கன அடி  சென்னை மக்களின் குடி நீருக்காக வெளியேற்றப் பட்டு வருகிறது. இதனால் 90.97 விழுக்காடு நீர் இருப்பு  உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ள ளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3269 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 60 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக 176 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது 89.69 விழுக்காடு நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ள ளவான 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதாலும் 40 கன அடி நீர் வருவதாலும் 30 கன  அடி உபரி நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது.