திருவள்ளூர், பிப்.3- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள சோலையம்மன் நகர் ஆட்டோ நிறுத்தத்தை சேர்ந்த சிஐடியு உறுப்பினரான ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி, புதனன்று (பிப். 1) காந்தி நகரிலுள்ள ஏடிஎம்-க்கு சென்றுள்ளார். அப்போது அந்த இயந்திரத்தில் யாரோ 9,500 ரூபாயை கவனக்குறைவாக அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அந்த பணத்தை எடுத்து சோழவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜனிடம் வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர் பாலாஜியின் நேர்மையை பாராட்டி சிஐடியு மாநில துணைச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.