திருவள்ளூர், பிப்.14- பொதட்டூர் பேட்டை யிலிருந்து புச்சிரெட்டிபள்ளி, மத்தூர் வழியாக திருத் தணிக்கு அரசுபேருந்து இயக்கிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தூர் கிளை யின் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த மத்தூர் கிளையின் மக்கள் கோரிக்கை மாநாடு கிளை செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடை பெற்றது. இதில் கட்டுப்பாட்டு குழுவின் மாநில தலைவர் ப.சுந்தர ராஜன் சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் வட்ட செயலாளர் வி.அந் தோணி, வட்டக்குழு உறுப்பினர்கள் கரிமுல்லா, பிருந்தாவனம், ஜெய்சங்கர், ஆர்.கே.பேட்டை வட்ட குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். நத்தம் புறம்போக்கு நிலத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும், வாசகர்களின் நலன் கருதி உடனடியாக நூலக கட்டிடத்தை புதுப் பிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் தினமும் அலுவலகத்திற்கு வந்து மக்கள் பணிசெய்திட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.