districts

img

மூட்டை யூரியா ரூ.500க்கு விற்பனை திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் வேதனை

திருவள்ளூர், மார்ச் 20- திருவள்ளூர் மாவட்டத்தில் யூரியாவை சட்ட விரோதமாக விற்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர்  மாவட்ட க்குழு கூட்டம் கும்மிடிப் பூண்டியில் ஞாயிறன்று (மார்ச் 20)  நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், பொருளாளர் சி.பெருமாள், துணை நிர்வாகி கள் பெ.இரவி, ஏ.அப்சல் அஹம்த், எம்.இரவிகுமார், சின்ன துரை, ஜெய் சந்திரன், ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். எம் சிவகுமார் நன்றி கூறினார். தீர்மானங்கள் மாவட்டம் முழுவதும் நிலவி வரும் யூரியா தட்டுப்பாட்டை போக்க வேண்டும், ஒரு மூட்டை ரூ. 267 க்கு விற்கப்படவேண்டிய யூரியா ரூ.500-க்கு சட்ட விரோதமாக விற்கும் நபர்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிளகாய் செடிகளை தாக்கி வரும் நோயை குணப்படுத்த மாவட்ட வேளாண்மை துறை நடவடிக்கை வேண்டும், 100 நாள் வேலை திட்ட நேரத்தை பழைய நிலைக்கு மாற்றி அமைக்க வேண்டும், தச்சூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மாற்று பாதை யில் கொண்டு செல்ல வேண்டும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.