திருவள்ளூர்,ஏப். 2- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் செங்குன்றத்தில் ஞாயிறன்று (ஏப்-2), நடைபெற்றது. இதற்குபேராசிரியர் ராஜகுரு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மாநில முன்னாள் செயலாளர் தனஞ்செயன், முன்னாள் பொரு ளாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ஓர் ஆண்டு அறிவியல் இயக்க பணிகளை மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு வாசித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்தகுமாரி, ஜெய நாராயணன், மருத்துவர் அனுரத்னா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள் மாவட்டத்தின் தலைநகரமான திரு வள்ளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.ஆவ டியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி யான இந்துக்கல்லூரியில் இயற்பியல், வேதி யியல் போன்ற அறிவியல் பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும், இட நெருக்கடியில் தவிக்கும் அரசு பள்ளிகளுக்கு நல்ல காற்றோட்டமான வகுப்பறைகளை அரசு கட்டிக்கொடுக்க வேண்டும், சுற்றுச் சூழல் மாசடைந்திருக்கும் காக்க ளூர் நடைபாதையை சீரமைக்கவேண்டும், பாழடைந்த சோழவரம் கிளை நூலகத்தை மேம்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.