திருவள்ளூர், மார்ச் 12- ஆவடி மாநகராட்சியில் பாது காப்பு துறைக்கு (எச்விஎப்) சொந்த மான பகுதியில் 11 நாட்கள் நடை பெறும் புத்தக கண்காட்சியின் இலட்சினையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார். ஆவடியில் முதலாவது புத்தகத் திருவிழா 2023 நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இலச்சினை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், “சென்ற ஆண்டு நடந்த புத்தக திருவிழாவில் விற்பனை யானதைவிட இந்த ஆண்டு மற்ற மாவட்டங்களை விட மிஞ்சும் அளவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது”என்றார். இந்த புத்தக திருவிழாவை யொட்டி பட்டிமன்றம், கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் மக்களவை மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பேச்சாளர் கோபி நாத், பேராசிரியர் திருஞானசம்பந்தர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். லோகோ வெளியிட்டு விழாவில் ஆவடி மாநகராட்சி மேயர் உதய குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப், மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், பொறியாளர் ரவிச்சந்திரன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் எஸ். கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.