திருவள்ளூர்,ஜன.23- திருவள்ளூர் அரசு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திரு வள்ளூர் பேருந்து நிலை யத்திலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருத்தணி, ஊத்துக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு வழித்தடத்தில் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால் பேருந்து கள் நிறுத்த சிரமப்படு கின்றனர். இதில் பயணி களும் நிற்க வேண்டும். மிகவும் குறுகலான இடம். இப்படி இடநெருக்கடி இருக்கும் நிலையில் பய ணிகள் மத்தியில் மாடு களும் வந்து நிற்கிறது. இது பயணிகள் மத்தியில் அச்சுறுத்தலாக உள்ளது. சாலைகளில், பேருந்து நிறுத்தம் மற்றும் பொது இடங்களில் மாடுகள் இரவு பகலாக சுற்றித்திரிகிறது. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. இது குறித்து தொடர்ந்து புகார் வரவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறி வித்திருந்தார்.எனினும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாடுகள் சுற்றித் திரிகிறது. இந்த நிலை\ யில் சாலையில் சுற்றித்திரி யும் மாடுகளின் உரிமை யாளர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி யுள்ளனர்.