districts

img

தூய்மை பணியாளர்களுக்கு 6 மாத சம்பள பாக்கி: உடனே வழங்க உள்ளாட்சி ஊழியர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 26- திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தூய்மை பணியாளர்க ளுக்கு 6 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் சங்கம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு  ஆரம்ப பள்ளிகள் 944, நடுநிலைப்பள்ளி 263, உயர்நிலைப்பள்ளி 118, மேல்நிலைப் பள்ளி 145, என மொத்தம் 1470 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் தூய்மை பணி யாளர்கள்  3000க்கும் மேற்பட்டோர்  நீண்ட கால மாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு  கடந்த 6 மாதங்கள் வரை சம்பள பாக்கி நிலுவை யில் உள்ளது. இத னால் அன்றாட செலவி னங்களுக்கு கூட சிரமப்படு கின்றனர்.  ஊதிய பாக்கி உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பள்ளியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை,  தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் சேர்வதற்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின்  சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கடந்த வாரம் மனு அளித்தனர். மனுவின் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ராமன் உடனடியாக ஊதிய பாக்கியை தருவதற்கான நடவடிக்கை எடுப்ப தாகவும், தூய்மை பணி யாளர்கள் நல வாரியத்தின் அடையாள அட்டை வழங்கு வதற்கு எங்களுக்கு உத்தரவு ஏதும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்.  எனவே ஊரக வளர்ச்சி துறை  பள்ளி தூய்மை பணி யாளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கி   தூய்மை பணியாளர்,  நல வாரியத்தில் சேர்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.