districts

img

வாங்காத கடனுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்

திருவண்ணாமலை, மார்ச்.1- செய்யாறு  வட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்க ளுக்கு வாங்காத கடனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து, வெள்ளியன்று  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் வசித்து வரும் எல்லம்மாள், மாசிகன், கன்னியம்மாள்,  குமார் ஆகி யோரிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு பச்சையப்பன்  என்பவர்   கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி தருவதாக சில தாள்களில் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளார்.

 இந்நிலையில் 2024 பிப்ரவரி  3 அன்று, மாங்கால் கூட்ரோடு மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து தங்களுக்கு  நோட்டிஸ் வந்ததாக புகார் அளித்துள்ளனர். மாங்கால் கூட்ரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் எவ்வித கடனும் பெறவில்லை.  எங்களிடம் கையொப்பம் வாங்கி எங்களது பெயரில் மோசடியாக கடன் பெற்ற பச்சையப்பன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இந்த மோசடிக்கு துணை போன மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறையீடு மனு வில் தெரிவித்துள்ளனர்.