திருவண்ணாமலை,ஜன. 27- திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணா மலை, ஆரணி, வந்தவாசி, திருவத்திபுரம்ஆகிய4 நகராட்சி களில் 123 வார்டுகள்உள்ளன. இவற்றில் 110 ஆண் வாக்காள ர்களுக்கான வாக்குச்சாவடிகள்,110 பெண் வாக்காளர்களக்கான வாக் ்குச்சாவடிகள், 63 பொது வாக்குச் ்சாவடிகள்எனமொத்தம் 283வாக்குச்சாவடிகள் அமைக்கப் படவுள்ளது. மேலும் இந்த 4 நகராட்சிகளில் 1,22,472 ஆண் வாக்காளர்கள், 1,33,782 பெண்வாக்காளர்கள் 20 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் என மொத்தம் 2,56,274 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்பட், தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் ஆகிய 10 பேரூராட்சிகளில் 150 வார்டுகள் உள்ளன. இந்த 10 பேரூராட்சிகளில், 59,749 ஆண் வாக்காளர்கள், 65,296 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,25,051 வாக்காளர்கள் உள்ளனர்.