திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தன் ஆகியோரை ஆதரித்து திருவண்ணாமலையில் புதனன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.