districts

img

திருவண்ணாமலையில் கலையரங்கம் அமைத்திடுக தமுஎகச மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை,ஜூன்.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை 9வது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூன்19) வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தோழர் கருணா அரங்கத்தில் நடை பெற்றது. தமுஎகச மாவட்ட மாநாட்டில்  பேராசிரியர் வேல. நெடுஞ்செழியன் நா. முத்துவேல், ம.வீரமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மா.பரிதிமாற் கலைஞன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வரவேற்பு குழு தலைவர் எஸ். குழந்தைவேலு வர வேற்றார், புகைப்பட கண்காட்சியை மருத்துவர் தேவ் ஆனந்த் தொடங்கி வைத்தார், மாநில செயற்குழு உறுப்பினர் சைதை ஜெ.துவக்க உரை யாற்றினார், மாவட்ட செயலாளர் மு.பாலாஜி வேலை அறிக்கையையும், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி வரவு,செலவு அறிக்கையையும் வாசித்தனர், மாநில செயற்குழு உறுப்பினர் நாடகவியலாளர் பிரளயன் நிறைவுரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் அ. செந்தில் குமார் நன்றி கூறினார். முன்னதாக பீம் வெற்றி குழுவின் பறை இசை முழங்க, பெரியார் சிலை அருகில் இருந்து எழுத்தாளர்கள் கலை ஞர்கள் ஊர்வலத்தை சந்துரு துவக்கி வைத்தார். சனிக்கிழமையன்று (ஜூன்17)  தமுஎகச சார்பில், "தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை" என்ற தலைப்பில் சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் பாலபாரதி  கருத்துரை யாற்றினார். முன்னதாக போளூர் வைகறை கலைக்குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது

தீர்மானங்கள்
திருவண்ணாமலையில் இலக்கிய நிகழ்வுகள் நடத்துவதற்கு தனி கலையரங்கம் அமைத்துத்தர வேண்டும், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு அமைக்கபட்டிருக்கும் தடுப்புகளை அகற்ற வேண்டும், சாதி மறுப்பு மணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக்கொள்கை முதலான அநீதிகளை, கலை இலக்கிய வடிவங்களின் வழியாக தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது 
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் மாவட்ட தலைவராக முத்துவேலன், மாவட்ட செயலாளராக பாலாஜி, பொருளாளராக மஞ்சுளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.