திருவண்ணாமலை,ஏப். 11- வெம்பாக்கம் அருகே தனது பிறந்தநாளன்று ஏரியில் மூழ்கி சிறு வன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி கிராமத்தில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் இளமாறன் (8). ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு திங்கட்கிழமை (ஏப். 10) பிறந்தநாள். அவரது பிறந்தநாளை கொண்டாட பெற்றோர் கேக் வாங்கி வந்து இள மாறனை தேடினர். நீண்ட நேரமாகியும் வராததால், தூசி பெரியார் நகரில் வசிக்கும் தாத்தா வீட்டிற்கு சென்று தேடினர். அங்கும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், தூசி கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து இளமாறன் உடலை சடலமாக மீட்ட னர்.